ஜாமீன் மனு தள்ளுபடி திகார் சிறையில் டெல்லி மாஜி அமைச்சர் சரண்

புதுடெல்லி: டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஹவாலா பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த 2022ம் ஆண்டு மே 30ம் தேதி கைது செய்யப்பட்டார். உடல் நிலை காரணமாக அவருக்கு கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. நிரந்தர ஜாமீன் கேட்டு சத்யேந்தர் ஜெயின் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இதையடுத்து, சத்யேந்தர் ஜெயின் நேற்று திகார் சிறையில் சரணடைந்தார்.

 

The post ஜாமீன் மனு தள்ளுபடி திகார் சிறையில் டெல்லி மாஜி அமைச்சர் சரண் appeared first on Dinakaran.

Related Stories: