தேர்தல் பறக்கும் படை சோதனை: கள்ளக்குறிச்சியை சேர்ந்தவரிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல்

குன்னம்: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பேருந்து நிலையம் அருகே தனி தாசில்தார் புகழேந்தி பெருமாள் தலைமையிலான தேர்தல் பறக்கும்படை குழுவினர் நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த காரில், அரியலூரில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் நல்லூருக்கு சென்ற கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவரால் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட
57 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறக்கும் படையை சேர்ந்த எஸ்எஸ்ஐ இளஞ்சியம் தலைமையில் போலீசார் பறிமுதல் செய்த மதுபாட்டில்களை குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலரிடம் ஒப் படைத்தனர்.

The post தேர்தல் பறக்கும் படை சோதனை: கள்ளக்குறிச்சியை சேர்ந்தவரிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: