கூட்டநெரிசலை தவிர்ப்பதற்காக சென்ட்ரல் – கோராக்பூர் இடையே சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: கூட்டநெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் கோராக்பூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோராக்பூர் ரயில் நிலையம் இடையே இன்று ஒரு வழி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயில் (06089) இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு நாளை காலை 7 மணிக்கு கோராக்பூர் ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது என கூறப்பட்டுள்ளது.

The post கூட்டநெரிசலை தவிர்ப்பதற்காக சென்ட்ரல் – கோராக்பூர் இடையே சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: