நெல்லை மாவட்டத்தில் 3 தாசில்தார்கள் திடீர் மாற்றம்

 

நெல்லை, மார்ச் 17: நெல்லை மாவட்டத்தில் வருவாய் துறையில் 3 தாசில்தார்கள் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மக்களவை தேர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் தாசில்தார்கள் கடந்த மாதம் மாற்றம் செய்யப்பட்டனர். அம்பை, /திசையன்விளை, ராதாபுரம், சேரன்மகாதேவி உள்ளிட்ட தாலுகாக்களுக்கு புதிய தாசில்தார்கள் கடந்த ஜன.31ம் தேதி நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில் 3 தாசில்தார்கள் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதுகுறித்த விவரம் வருமாறு: அம்பாசமுத்திரம் நதிநீர் இணைப்புத் திட்டம் அலகு 1 தனி தாசில்தார் (நில எடுப்பு) ராஜேந்திரன் அம்பாசமுத்திரம் தாசில்தாராகவும், அம்பாசமுத்திரம் தாசில்தார் இசக்கிபாண்டி நாங்குநேரி ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாராகவும், நாங்குநேரி ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் சுப்புலெட்சுமி நெல்லை மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார்.

The post நெல்லை மாவட்டத்தில் 3 தாசில்தார்கள் திடீர் மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: