வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

சேலம், மார்ச்15: சேலம் கன்னங்குறிச்சி 6வது வார்டு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(19). இவருக்கும் டவுன் முகமது யாகூப் தெருவை சேர்ந்த ரஞ்சித்குமார்(19) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் சக்திவேல் தனது நண்பர்களான மாணிக்கம், மூர்த்தி ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரஞ்சித்குமாரும், அவரது நண்பர்களான பெரிய புதூரைச்சேர்ந்த நந்தகுமார்(24), சின்னதிருப்பதி பாண்டியன் தெருவை சேர்ந்த சிவப்பிரகாஷ்(19)ஆகியோர், சக்திவேலிடம் தகராறில் ஈடுபட்டதுடன், தாக்கினர். இதில் காயம் அடைந்த சக்திவேல் சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் கன்னங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: