இந்த நிகழ்ச்சிக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை அரக்கோணம் துணை கமாண்டன்ட் சங்கேத் தலைமை வகித்தார். தேசிய பேரிடர் மேலாண்மை துறை ஆணைய ஆலோசகர்கள் ரஜினேஷ் மற்றும் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் முதலுதவி மையத்தை சேர்ந்த 45 பேர் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். இதில் விமான நிலைய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் அதிகாரி விஸ்வநாதன் மற்றும் விமான நிலைய முதுநிலை மேலாளர் ஹரிசங்கர், விமான நிலைய தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவ துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post மதுரை விமான நிலையத்தில் பேரிடர் காலங்களில் பயணிகளை மீட்பது எப்படி: தேசிய பேரிடர் மீட்பு படை விளக்கம் appeared first on Dinakaran.