சி.ஏ.ஏ.வை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி

சென்னை: சி.ஏ.ஏ.வை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; ஒன்றிய பாஜக அரசின் இத்திருத்தச் சட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்த ஒரு சட்டத்துக்கும் தமிழ்நாடு அரசு இடம்கொடுக்காது. மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவசரகதியில் சிஏஏ சட்டத்தை அமல்படுத்தியுள்ளது ஒன்றிய அரசு. சிஏஏ சட்டத்தால் எந்தவிதமான நன்மையோ பயனோ இருக்கப்போவதில்லை என்று முதல்வர் கூறியுள்ளார்.

 

The post சி.ஏ.ஏ.வை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: