மேலும் மழை காலங்களில் சடலத்தை கொண்டு செல்லும்போது மிகவும் சிரமப்பட்டு சென்று வருகின்றனர். எனவே இப்பகுதியை சேர்ந்த கிராம மக்களின் நலன் கருதி இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் சுடுகாடு வசதி இல்லாததால் பல ஆண்டு காலமாக அவதிப்பட்டு வருகிறோம். பாசன வாய்க்கால் கரையோரத்தில் சடலத்தை அடக்கம் செய்து வருகிறோம். ஆகையால் எங்கள் கிராம மக்களுக்கு சுடுகாடு வசதி செய்து தர தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
The post வாய்க்கால் பகுதியில் சடலத்தை புதைக்கும் அவலம் மேலதிருக்கழிப்பாளை ஊராட்சியில் சுடுகாடு அமைக்க மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.