பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு நில எடுப்புக்கான அறிவிப்பு வெளியீடு..!!

காஞ்சிபுரம்: பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு நில எடுப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள சிறுவள்ளூர் கிராமத்தில் 1,75,412 ச.மீ., நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிலம் குறித்து பாத்தியதை உள்ளவர்கள் தங்களின் கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளை 30 நாளுக்குள் தெரிவிக்கலாம். காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடவூரில் நில எடுப்பு அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டது.

The post பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு நில எடுப்புக்கான அறிவிப்பு வெளியீடு..!! appeared first on Dinakaran.

Related Stories: