மேலும் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கவும், இதில் ரூ.5லட்சம் அரசாங்கமும், 18 பேர் மீதான பலாத்கார குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து, ரூ.5 லட்சத்தை வசூலித்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவைக் கருத்தில் கொண்டு, அரசு கவனமாகப் பரிசோதித்த பிறகு பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் ரூ.1 கோடியே 80 லட்சம் இழப்பீடாக வழங்க கடந்த 8ம் தேதி உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் நேற்று முன்தினம் மாலை கிராமத்தில் பாதிக்கப்பட்ட 18 பேரை கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் தலைமையிலான, வருவாய்த் துறை அதிகாரிகள் நேரில் சந்தித்து தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினர்.
The post ஐகோர்ட் உத்தரவின் பேரில் வாச்சாத்தியில் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு நிவாரணம்: தலா ரூ.10 லட்சம் நிதியுதவி appeared first on Dinakaran.