மார்ச் 12ல் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

 

தேனி, மார்ச் 9: தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் வருகிற 12ம் தேதி தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 12-ம் தேதி காலை 10 மணி அளவில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடக்கவுள்ளது.

இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்து தீர்வுகாணலாம் எனவும், மனு அளிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், யுடிஐடி அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம்- 1 உடன் நேரிலோ அல்லது பாதுகாவலர் மூலமாகவோ விண்ணப்பித்து பயன்பெறலாம் எனவும் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

The post மார்ச் 12ல் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: