ஓய்வூதிய திட்டம்: நிதித்துறை செயலாளர் பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்கக் கோரிய மனு தொடர்பாக தமிழ்நாடு நிதித்துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. வேடசந்தூரை சேர்ந்த பிரடெரிக் ஏங்கல்ஸ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு உத்தரவிட்டது.

The post ஓய்வூதிய திட்டம்: நிதித்துறை செயலாளர் பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை appeared first on Dinakaran.

Related Stories: