தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில பொது செயலாளர் நீக்கம்

சென்னை: தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில பொதுச்செயலாளர் தண்டபாணியை நீக்கம் செய்து மாநிலத் தலைவர் அமிர்தகுமார் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருபவர் தண்டபாணி. இவர் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தில் மாநில பொதுச்செயலாளராக செயலாற்றி வந்தார். பல மாதங்களாக சங்க அலுவலகத்திற்கு வராமலும், தனது பொதுச்செயலாளர் பணியை சரிவர செய்யாமலும் இருந்தார். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாண்பையும், ஒற்றுமையையும் சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதால் தண்டபாணியை மாநில பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில பொது செயலாளர் நீக்கம் appeared first on Dinakaran.

Related Stories: