அவர்கள் நாங்குநேரி அருகே உள்ள தாளைகுளத்தில் நான்கு வழி சாலையை கடக்க முயன்றனர். அப்போது நெல்லையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற சொகுசு கார், பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் பைக் உடைந்து நொறுங்கியது. அதே நேரத்தில் காரின் முன்பகுதியும் சேதமடைந்தது. இந்த விபத்தில் மகேஷ் மற்றும் மாலை ராஜா ஆகிய இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். தகவலறிந்து போலீசார் வந்து காயமடைந்த சண்முகவேலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை சண்முகவேல் இறந்தார்.
The post பைக் மீது கார் மோதி 3 வாலிபர்கள் பலி appeared first on Dinakaran.