மாங்காடு அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னை அடுத்த மாங்காடு அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. கெருகம்பாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக இமெயிலுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. பள்ளி நிர்வாகம் மாங்காடு போலீசில் அளித்த புகாரை அடுத்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர். கடந்த மாதம் 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவத்தை அடுத்து தற்போது மீண்டும் தனியார் பள்ளிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

The post மாங்காடு அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Related Stories: