அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி பதிலளித்த அமைச்சர்:
உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினர் அந்தஸ்து கோரி 22-க்கும் மேற்பட்ட நாடுகள் விண்ணப்பித்துள்ளன. அவர்களுடைய கோரிக்கைகளை கருணை அடிப்படையிலான பார்வை கொண்டு, உலகளாவிய தெற்கு பகுதியின் தலைவர் என்ற வகையில், இந்தியா அதற்கு தன்னுடைய ஆதரவை அளிக்கும் என கூறினார்.
இரு தினங்களுக்கு முன் கடந்த 26-ந்தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கமரோஸ் மற்றும் திமோர்-லெஸ்தே, முறைப்படி உலக வர்த்தக அமைப்பில் இணைந்தன. இந்த இரு நாடுகளும் இணைந்தது பற்றி குறிப்பிட்டு பேசிய கோயல், கமரோஸ் மற்றும் திமோர்-லெஸ்தே ஆகிய நாடுகள் உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர்களாக இடம்பெற வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். அவை, உலக வர்த்தக அமைப்பில் சேர்க்கப்பட்டதற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என கூறியுள்ளார்.
The post உலக வர்த்தக அமைப்பின் 13-வது அமைச்சர்கள் மாநாடு: உறுப்பினராக விண்ணப்பித்த நாடுகளுக்கு இந்தியா ஆதரவு appeared first on Dinakaran.