மதுபான கொள்கை முறைகேடு வழக்கு கெஜ்ரிவாலுக்கு 8வது சம்மன்

புதுடெல்லி: டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பாக முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பி வருகின்றது. இதுவரை ஏழு முறை அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். ஆனால் ஒரு சம்மனைகூட முதல்வர் கெஜ்ரிவால் ஏற்கவில்லை. இந்நிலையில் 8வது முறையாக விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சார்பில் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. வருகிற 4ம் தேதி டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post மதுபான கொள்கை முறைகேடு வழக்கு கெஜ்ரிவாலுக்கு 8வது சம்மன் appeared first on Dinakaran.

Related Stories: