மேலும் 3 போலீசார் காயம் அடைந்தனர். எதிர் திசையில் வந்த காரில் இருந்த 4 பேரும் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் பூர்ணியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், விபத்தின் போது தேஜஸ்வியின் கார் கான்வாய்க்கு பின்னால் சென்றதால், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். போலீஸ் விசாரணையில், பூர்ணியா-கதிஹார் தேசிய நெடுஞ்சாலையில் தேஜஸ்வியாத்திரை சென்றபோது, திடீரென போலீஸ் கான்வாய் வாகனம் தவறான திசையில் சென்றது. அதனால், கதிஹார் பகுதியில் இருந்து வந்த கார் மீது கான்வாய் வாகனம் நேருக்கு நேர் மோதியதாக கூறப்படுகிறது.
The post ‘ஜன் பிஸ்வாஸ்’ யாத்திரையின் போது தேஜஸ்வியின் கான்வாய் வாகனம் மோதி டிரைவர் பலி: மேலும் 8 பேர் படுகாயம் appeared first on Dinakaran.