தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் உணவு கண்காட்சி


காஞ்சிபுரம்: மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியல் கல்லூரியின் உணவுத்துறை சார்பில், உணவு திருவிழா மற்றும் உணவு கண்காட்சி நேற்று முன்தினம் கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மனுவேல்ராஜ் தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாக இயக்குநர் மணி முன்னிலை வகித்தார்.

இதில், கல்லூரி முதல்வர் மனுவேல்ராஜ் கலந்துகொண்டு, மாணவ – மாணவிகளுக்கு உணவு முறைகள், உணவின் முக்கியத்துவம், உணவு தொழில் நுட்ப துறையில் எதிர்கால வேலை வாய்ப்புகள் மற்றும் உணவே மருந்து நாம் உயிர் வாழ முக்கியத்துவமானது என்றும், அந்த உணவு முறைகளை அந்த காலத்தில் நமது முன்னோர்களும், இந்த காலத்தில் நாம் பயன்படுத்தும் முறைகளும் உள்ள வேறுபாடுகளை பற்றியும் விரிவாக எடுத்து கூறினார்.

பின்னர், உணவு சங்கத்தை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, பல்வேறு உணவு கண்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.  இக்கண்காட்சியினை பேராசிரியர்கள், 200க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். முன்னதாக, உளவுத்துறை முதல்வர் அருணா வரவேற்றார்.

The post தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் உணவு கண்காட்சி appeared first on Dinakaran.

Related Stories: