தென்னிந்திய ஆணழகன் போட்டி காரைக்கால் இளைஞர் பட்டம் வென்றார்

காரைக்கால்,பிப்.22: தென்னிந்திய அளவிலான ஆண்கள் பெண்கள் பிரிவிற்கான ஜூனியர் பிரைடு 2024 க்கான போட்டிகள் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த ஆடவர்கள் அழகிகள் கலந்து கொண்டன. ஆடவர் பிரிவுக்கான போட்டியில் புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலைச் சேர்ந்த கோவிந்த கர்ண ராஜன் வென்று தென்னிந்திய அளவிலான ஜூனியர் பிரைட் 2024 பட்டத்தை தட்டிச் சென்றார். வெற்றி பெற்ற கோவிந்த கர்ண ராஜன்க்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

The post தென்னிந்திய ஆணழகன் போட்டி காரைக்கால் இளைஞர் பட்டம் வென்றார் appeared first on Dinakaran.

Related Stories: