கழுகுமலையில் சமுதாய நலக்கூட அடிக்கல் நாட்டுவிழா

கழுகுமலை, பிப். 22: கழுகுமலை குமரேசன் நகரில் புதிய சமுதாய நலக்கூட கட்டுமான பணியை பேரூராட்சி துணை தலைவர் சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். கழுகுமலை பேரூராட்சி 15வது வார்க்குட்பட்ட குமரேசன் நகரில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய சமுதாய நலக்கூடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் தலைமை வகித்தார். பேரூராட்சி துணை தலைவர் சுப்பிரமணியன், அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார். இதில் பேரூர் செயலாளர் கிருஷ்ணகுமார், வார்டு செயலாளர் காளிதாஸ், கார்த்திக், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரபிரபு அரசு ஒப்பந்ததாரர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கழுகுமலையில் சமுதாய நலக்கூட அடிக்கல் நாட்டுவிழா appeared first on Dinakaran.

Related Stories: