கட்டணம் செலுத்தவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஏலம் முடிந்தவுடன் எடுக்காதவர்களின் கட்டண தொகை திருப்பிக் கொடுக்கப்படும். ஏலத்தில் வாகனத்தை எடுப்பவர் தனது சொந்த செலவில் சிறையில் இருந்து எடுத்துச் செல்ல வேண்டும். ஏலத்தொகை ஏற்றுக் கொள்வதற்கு அறிவிப்பு கிடைக்கப்பெற்ற 10 நாட்களுக்குள் ஏல தொகையினை வரிகள் உட்பட செலுத்தி வாகனத்தை பெற்று செல்ல வேண்டும். குறிப்பிட்ட தினத்தில் ஏலத் தொகை செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ளாவிட்டால், செலுத்திய தொகை பறிமுதல் செய்ததோடு அதனால் அரசுக்கு ஏற்படும் இழப்பு தொகையும் சம்பந்தப்பட்ட நபரிடம் வசூலிக்கப்படும்.
ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர், விசாரணை சிறையில் உள்ள அலுவலக நாட்களில் காலை 10.30 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறை கண்காணிப்பாளர் முன் அனுமதி பெற்று சிறை துணை அலுவலர் மற்றும் சிறை அலுவலர் முன்பு வாகனத்தை பார்வையிடலாம். இவ்வாறு புழல் மத்திய சிறை விசாரணை கண்காணிப்பாளர் பரசுராமன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்
The post புழல் சிறையில் உள்ள ஆம்புலன்ஸ் வாகனம் ஏலம் appeared first on Dinakaran.