இதையடுத்து அப்போது விசாரணையை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று வளர்மதி தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் தொடர்பான வழக்குகளை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வரும் நிலையில் உச்ச நீதிமன்றத்திற்கு ஏன் வந்தீர்கள்?. இதுபோன்ற வழக்குகளை நாங்கள் ஏன் விசாரிக்க வேண்டும். முதலில் உயர் நீதிமன்றத்தை அணுகுங்கள், பின்னர் அந்த உத்தரவில் ஏதேனும் தேவை என்றால் உச்ச நீதிமன்றத்திற்கு வரலாமே என சரமாரி கேள்வியெழுப்பிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
The post உயர்நீதிமன்றத்தில் வழக்கு உள்ளபோது நேரடியாக இங்கு வந்தது ஏன்?: அதிமுக மாஜி அமைச்சர் வளர்மதிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.