இதையடுத்து, பி.எப். வட்டி விகிதம் 8.15 சதவீதத்திலிருந்து 8.25 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கான உயர்வு ஆகும். இதன் மூலம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருக்கும் பணத்திற்குக் கூடுதல் வட்டி வருமானம் கிடைக்க உள்ளது. இதுகுறித்த பரிந்துரையை நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் ஒப்புதலுக்குப் பிறகு வட்டி விகிதம் குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்படும். அதன் பிறகே, இபிஎஃப்ஓ அமைப்பு சந்தாதாரர்களின் கணக்குகளில் வட்டி வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 7 கோடி பேர் பயனடைவார்கள் எனத் தெரிகிறது.
The post 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2023-24 ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.25%-ஆக அதிகரிப்பு!! appeared first on Dinakaran.