அதைதொடர்ந்து பின்னி மில் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிய சென்னை தி.நகர் 27வது தெருவில் உள்ள லேன்ட் மார்க் ஹவுசிங் பிராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் மற்றும் அதன் மேலான் இயக்குநர் உதயகுமாரின் வீடு, அதேபோல், புளியந்தோப்பு படாளம் ஸ்ட்ராஹன்ஸ் சாலையில் அமைந்துள்ள கே.எல்.பி. பிராஜெக்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இயக்குநர்கள் சுனில் கேட்பாரியா, மனீஷ் பார்மர் ஆகியோர் அலுவலகம் மற்றும் வீடுகள், எம்ஜிஎம் கோல்டு மதுபான உரிமையாளர் அரவிந்த் வீடு, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆடிட்டர் கணபதி வீடு என மொத்தம் 10 இடங்களில் ஒன்றிய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் உதவியுடன் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பிக்கள் பலர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
The post 2 கட்டுமான நிறுவன அதிபர்களுக்கு சொந்தமான 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை appeared first on Dinakaran.