இந்நிலையில், நிலத்தில் அளவீடு செய்து நடுவதற்காக, முட்டுக்கல்லை வேனில் ஏற்றிக் கொண்டு வந்து இறக்கிக் கொண்டிருந்தனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த தனம் மற்றும் அவரது மகன் தானிஸ்வரன் ஆகியோர், கற்களை இறக்கக் கூடாது என தெரிவித்து தகராறு செய்துள்ளனர். தொடர்ந்து எனது நிலத்தில் எதற்காக வாகனத்தை நிறுத்தினாய் எனக்கூறி, அங்கிருந்த கல்லை எடுத்து முன்பக்க கண்ணாடியை அடித்து உடைத்து நொறுக்கினார்.
அப்போது, அங்கிருந்தவர்கள் கண்ணாடியை தனம் அடித்து உடைப்பதை, செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இந்நிலையில், சம்பவம் குறித்து வேன் டிரைவர் குமார் கொடுத்த புகாரின் பேரில், ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஓமலூர் அருகே நிலப்பிரச்னையில் வேன் கண்ணாடியை அடித்து நொறுக்கிய பெண் -வீடியோ வைரலால் பரபரப்பு appeared first on Dinakaran.