டெல்லி செல்லும் ஆளுநர், ஒன்றிய உள்துறை அமைச்சரை சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில், தற்போது, ஆளுநர் ரவிக்கும், தமிழக அரசுக்கும், இடையே தொடர்ந்து பிரச்னைகள் இருந்து வருகிறது. அதோடு அவரது செயல்பாடுகள் குறித்து, நாடாளுமன்றத்திலும் பிரச்னை எழுப்பப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு, ஆளுநருக்கு எதிராக தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணையிலும் இருந்து வருகிறது. இதற்கிடையே ஆளுநர் சொந்த பயணமாகவே டெல்லி செல்கிறார். இது திடீர் பயணம் அல்ல. ஏற்கனவே திட்டமிட்ட பயணம் தான் என்றும் கூறப்படுகிறது.
The post 3 நாள் பயணமாக ஆளுநர் ரவி டெல்லி புறப்பட்டு சென்றார் appeared first on Dinakaran.