இந்நிலையில், நேற்று ஒரு கிலோ மல்லி ரூ.1,800க்கும், ஐஸ் மல்லி ரூ.1500க்கும், காட்டு மல்லி, முல்லை ரூ.500க்கும், ஜாதி மல்லி ரூ.400க்கும், கனகாம்பரம் ரூ.300க்கும், அரளி பூ ரூ.100க்கும், சாமந்தி, பன்னீர் ரோஸ் ரூ.20க்கும், சம்பங்கி ரூ.15க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் கடுமையாக சரிந்துள்ளது. தை மாதம் பிறந்தால் அனைத்து பூக்களின் விலையும் உயரும் என்று எதிர்பார்த்த நிலையில் விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாள் இல்லாததால் அனைத்து பூக்களின் விலை கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. வரும் 9ம் தேதி அமாவாசை வருவதால் அதன் பின்னர் விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாள் வரும் என்பதால் அப்போது அனைத்து பூக்களின் விலை படிப்படியாக விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது,’’ என்றார்.
The post கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை சரிவு appeared first on Dinakaran.