காந்தி நினைவுநாள் அனுசரிப்பு

சேலம்:சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று, மறைந்த மகாத்மா காந்தியின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. மாநகர் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் கட்சியினர், சேலம் கலெக்டர் அலுவலகம் முன்புள்ள தியாகிகள் ஸ்தூபியில் திரண்டனர். அங்கு, மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, மதநல்லிணக்க உறுதிமொழியை கட்சியினர் எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணைமேயர் சாரதாதேவி, வர்த்தக பிரிவு தலைவர் சுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 

The post காந்தி நினைவுநாள் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: