ஏனெனில் மம்தாவின் நோக்கம் தான், இந்திய கூட்டணியின் நோக்கமாகும். இது மேற்கு வங்காளத்தில் மட்டுமல்ல, நாட்டின் மற்ற பகுதிகளிலும் பாஜவை வலுவாகவும், உறுதியாகவும் தோற்கடிக்க உதவும். காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைவரும் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் ஒரு பகுதியில் மம்தா கலந்து கொண்டால் மகிழ்ச்சியும் பாக்கியமும் அடைவார்கள். அவரது வருகையால் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மிகவும் வலுவடையும். மம்தா இல்லாமல், மேற்குவங்கம் மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் பாஜவை எதிர்த்துப் போராட முடியாது. அவர் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைந்த, இன்றியமையாத தூண். அவர் இந்தியா கூட்டணியை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றியுள்ளார். இவ்வாறு தெரிவித்தார்.
The post இந்தியா கூட்டணியில் விரிசல் மம்தாவிடம் பேசினார் கார்கே appeared first on Dinakaran.