விழாவில் பங்கேற்பதற்காக அவர் இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூர் வந்தடைந்தார். அங்கிருந்து இரவு டெல்லி வந்து தங்கும் மேக்ரான், நாளை குடியரசு தின விழாவில் பங்கேற்கிறார். இந்நிலையில் 75வது குடியரசு தினத்தையொட்டி நாட்டுமக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்புரை ஆற்றினார். அவர் கூறியதாவது: இந்திய ஜனநாயக அமைப்பு மேற்கத்திய ஜனநாயகத்தை விட மிகவும் பழமையானது. இது மாற்றத்திற்கான காலம், தேசம் அமிர்த காலத்தின் ஆரம்ப ஆண்டுகளில் உள்ளது. ராமர் கோவில் மக்களின் நம்பிக்கை மட்டுமல்ல, நீதித்துறை செயல்பாட்டின் நம்பிக்கைக்கும் சான்று. மகளிர் இடஒதுக்கீடு மசோதா பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான ஒரு புரட்சிகர கருவியாகும். நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல நமக்கு பொன்னான வாய்ப்புகள் உள்ளன. நமது இலக்கு அடைய ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பு முக்கியமானது.
The post மகளிர் இடஒதுக்கீடு மசோதா பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான ஒரு புரட்சிகர கருவியாகும்: ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்புரை appeared first on Dinakaran.