அய்யம்பேட்டையில் திமுக செயற்குழு கூட்டம்

கும்பகோணம், ஜன.21: அய்யம்பேட்டையில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, அய்யம்பேட்டையில் பேரூர் திமுக செயற்குழு கூட்டம் பேரூர் திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பேரூராட்சி உறுப்பினர் துறைமுகம் பாலாஜி தலைமை வகித்தார். துணை செயலாளர் குமரன் வரவேற்றார். மாவட்ட பிரதிநிதிகள் மனோகரன், முபாரக், பேரூராட்சி துணைத்தலைவர் அழகேசன், ஒன்றிய பிரதிநிதி சவுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பேரூர் செயலாளர் துளசி அய்யா கலந்து கொண்டு பிஎல்ஏ-2 முகவர்களின் பணிகள் மற்றும் வாக்குச்சாவடி உறுப்பினர்களின் பணிகள் குறித்தும் விளக்கி பேசினார். இக்கூட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகள் முகமது அபுதாஹிர், மோகன்ராஜ், கார்த்திக், வார்டு செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பிரதிநிதி சுரேஷ் நன்றி கூறினார்.

The post அய்யம்பேட்டையில் திமுக செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: