சிறப்பு ஓய்வூதியம் வழங்ககோரி சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் பேரணி

நாகப்பட்டினம்,ஜன.20: சிறப்பு ஓய்வூதியம் வழங்ககோரி சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் நாகப்பட்டினத்தில் பேரணியாக சென்றனர். நாகப்பட்டினம் அவுரி திடலில் தொடங்கிய பேரணிக்கு மாவட்ட இணை செயலாளர் பவானி தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் ஆரோக்கியமேரி வரவேற்றார். மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் ஜெயராஜ் ஆகியோர் பேசினர். பேரணி தம்பிதுரை பூங்கா, வெளிப்பாளையம் வழியாக ஆர்டிஓ அலுவலகத்தை சென்றடைந்தது. ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் ரூ. 6 ஆயிரத்து ,750 வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்பி, கால முறை ஊதிய வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ச் அணிந்தபடி பேரணியாக சென்றனர்.

The post சிறப்பு ஓய்வூதியம் வழங்ககோரி சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் பேரணி appeared first on Dinakaran.

Related Stories: