ஒன்றிய அரசைக் கண்டித்து லாரி டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி, ஜன. 19: தேனி கலெக்டர் அலுவலகம் முன்பாக அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக நேற்று சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். செயலாளர் முத்துப்பாண்டி, பொருளாளர் மாரிச்சாமி, கவுரவ தலைவர் உசேன்கான் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது, வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தும் ஓட்டுனர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.7 லட்சம் வரை அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டுள்ளதை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

The post ஒன்றிய அரசைக் கண்டித்து லாரி டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: