மேலும், சடலத்தை அப்புறப்படுத்த உதவிய பால்ராஜ் கில்லை, மேற்கு வங்கத்தில் போலீஸார் நேற்று நேற்று சுற்றி வளைத்து கைது செய்தனர். மற்றொரு நபரான ரவி பங்காவை தொடர்ந்து தேடி வருகின்றனர். அபிஜித் சிங்கின் சில ஆபாச வீடியோக்களை, திவ்யா பஹுஜா தனது போனில் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது, அதை அழிக்குமாறு அபிஜித் சிங், திவ்யா பஹுஜாவிடம் கூறியுள்ளார். ஆனால் அதை அழிக்க மறுத்ததுடன், அபிஜித் சிங்கை, திவ்யா பஹுஜா பிளாக்மெயில் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக அபிஜித் சிங், தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து திவ்யா பஹுஜாவை சுட்டுக் கொன்றதாகவும், பட்டியாலாவில் உள்ள கால்வாயில் மாடல் அழகியின் சடலம் வீசப்பட்டதாக ரவுடி கும்பல் கூறியிருப்பதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், குருகிராமில் ஜனவரி 3ல் ஹோட்டலில் சுட்டுக் கொல்லப்பட்ட மாடல் அழகி திவ்யா பகுஜாவின் உடல் கால்வாயில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
The post சுட்டுக் கொல்லப்பட்ட மாடல் அழகி: குருகிராமில் ஜனவரி 3ல் ஹோட்டலில் கொலை செய்யப்பட்ட திவ்யா பகுஜாவின் உடல் கண்டெடுப்பு!! appeared first on Dinakaran.