வங்கிக் கடன் மோசடி தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கில் காவல் நீட்டிப்பு வழங்கியதை ரத்து செய்யக் கோரியும் ஜாமின் வழங்கக் கோரியும் தினேஷ் சந்த் சுரானா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது, புலன் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது என அமலாக்கத்துறை தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணை முடிவடையவில்லை எனக் கூற முடியாது என அமலாக்கத்துறை தெரிவித்தது. அமலாக்கத்துறையின் வாதத்தை ஏற்று தினேஷ் சந்த் சுரானாவின் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் அமலாக்கத்துறையின் வழக்கை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post சுரானா நிறுவனம் வங்கிக் கடன் மோசடி: வழக்கை 6 மாதங்களில் முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் ஆணை..!! appeared first on Dinakaran.