சிற்றாறு அருகே தூய்மை பணியாளரின் பைக் திருட்டு

அருமனை,டிச.29: சிற்றாறு அருகே மலை கிராமமான மூக்கரக்கல் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (29). கடையாலுமூடு பஞ்சாயத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்றுமுன்தினம் வழக்கம் போல் தனது பைக்கில் வேலைக்கு சென்றார். ஆம்பாடி பகுதியில் குழுவாக தூய்மை பணிக்கு சென்றவர்கள் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் உண்டியல் அருகே பைக்குகளை வைத்து விட்டு சற்று தொலைவில் ரோட்டோர தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தனர். வேலை முடிந்து திரும்பி வந்து பார்த்தபோது மணிகண்டனின் பைக்கை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் எந்த தகவலும் இல்லை. இது குறித்து கடையாலுமூடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post சிற்றாறு அருகே தூய்மை பணியாளரின் பைக் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: