மின் அலங்கார சப்பர பவனி

வத்தலக்குண்டு, டிச. 27: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வத்தலக்குண்டு அருகே சூசையப்பர், மாதா, குழந்தை ஏசு மின் அலங்கார சப்பரத்தில் பவனி வந்தனர். த்தலக்குண்டு கோம்பைப்பட்டி ஊராட்சி மேலக்கோவில்பட்டியில் பிரசித்த பெற்ற புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு திருப்பலி நடந்தது. பங்குத்தந்தை ஜெயராஜ் திருப்பலியை நடத்தினார். நேற்றிரவு மின் அலங்கார சப்பரத்தில் சூசையப்பர், மாதா, குழந்தை இயேசு ஆகியோர் பவனி வந்தனர். இதில் சப்பர பவனியில் மேலக்கோவில்பட்டி, வத்தலக்குண்டு உள்பட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

The post மின் அலங்கார சப்பர பவனி appeared first on Dinakaran.

Related Stories: