செங்கல்பட்டு மாவட்டத்தில் வண்டலூர் தாம்பரம் உள்ளிட்ட நான்கு வட்டங்களுக்கு மட்டுமே நிவாரணம் அறிவித்துள்ளது. நாங்களும்தான் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களுக்கு ஏன் நிவாரணம் வழங்குவது குறித்து அறிவிப்பு வரவில்லை. எங்களுக்கும் நிவாரணம் வழங்கவேண்டும் என கிராம நிர்வாக அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இது குறித்து தகவலறிந்து வந்த செங்கல்பட்டு வட்டாட்சியர் ராஜலட்சுமி முற்றுகையிட்ட பெண்களிடம் பேசினார். பின்னர், அவர்களிடமிருந்து கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு இதுகுறித்து கலெக்டரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாலைமறியிலில் ஈடுபடுவோம் என அப்பகுதி மக்கள் கூறினர்.
The post நிவாரணம் வழங்க கோரி விஏஓ அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் appeared first on Dinakaran.