தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல்

 

பொன்னமராவதி, டிச.12: பொன்னமராவதி அருகே காரையூரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல் வைக்கப்பட்டது. காரையூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக மாவட்ட சிறப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து மாவட்ட சிறப்பு படை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் காரையூர் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது காரையூரில் சதாம் உசேன் என்பவர் நடத்தி வந்த மளிகை கடையில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள புகையிலை பொருட்களை சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பிரவீன் குமார் மற்றும் காரையூர் போலீசார் பறிமுதல் செய்து,மளிகை கடைக்கு சீல் வைத்தனர்.

 

The post தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல் appeared first on Dinakaran.

Related Stories: