இந்நிலையில், ஊரப்பாக்கத்தில் இருந்து காரணைப்புதுச்சேரி செல்லும் கூட்ரோட்டில் உள்ள ஒரு டீக்கடை அருகே முருகன் இருப்பதாக கிைடத்த தகவலையடுத்து கூடுவாஞ்சேரி போலீஸ் எஸ்ஐ தனசேகரன் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று அவரை மீட்டனர். போலீசார் கூறுகையில், சம்பவத்தின்று இரவு முருகன் டீ குடிப்பதற்காக காரணைப்புதுச்சேரி டீக்கடைக்கு சென்றுள்ளார். அப்போது, கடையின் அருகே மழைநீர் தேங்கி இருந்த கால்வாயில் தவறி விழுந்துள்ளார். இதனால், அவர் அதிர்ச்சியில் மனநிலை பாதிக்கப்பட்டு கடந்த 3 நாட்களாக சாப்பிடாமல் பசியும் பட்டினியமாக இருந்து வந்துள்ளார். இதனையடுத்து, அவரை குளிக்க வைத்து உணவு, உடை வழங்கி அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தோம். பின்னர், அவரது குடும்பத்தினர் வந்தனர். அவரிகளிடம் முருகனை நேற்று மதியம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தோம்’ என்றார்.
The post மனநிலை பாதிக்கப்பட்டு மாயமான தூய்மை பணியாளர் மீட்பு appeared first on Dinakaran.
