வெள்ள நிவாரண நிதிக்கு பாமக எம்பி, எம்எல்ஏக்களின் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

அவனியாபுரம்: சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்ற பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். 1931ல் கடைசியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. புயலுக்கு பின் சென்னையில் இயல்பு நிலை திரும்பவில்லை. அதிகாரிகள் வேலை செய்கிறார்கள். ஒன்றிய அரசு வெள்ள நிவாரண நிதியாக அளித்த ரூ.500 கோடி போதுமானதாக இருக்காது.

சென்னையை சுற்றி புதிதாக 10 ஏரிகள் உருவாக்க வேண்டும். சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மருத்துவ முகாம் நடைபெற வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் பாமக நிலைப்பாடு பற்றி விரைவில் அறிவிப்போம். பாமக சார்பில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் 5 எம்எல்ஏக்களின் ஒரு மாத ஊதியத்தை முதல்வரின் வெள்ள நிவாரணத்திற்காக கொடுப்போம். இவ்வாறு கூறினார்.

 

The post வெள்ள நிவாரண நிதிக்கு பாமக எம்பி, எம்எல்ஏக்களின் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: