வண்ணங்கள் மூலம் ஆற்றலை பெற்றுக் கொள்கிறோம். வண்ணங்கள் நமக்கு மாற்றங்களை ஏற்படுத்துகின்றது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. வண்ணத்திற்குள் எண்ணங்கள் அதிகம். அந்த வண்ணங்கள் நேர்மறை ஆற்றலையும் எதிர்மறை ஆற்றலையும் தரும். உங்கள் உணர்வுகளிலிருந்து உங்கள் வண்ணம் உங்களுடன் எப்படி உறவு கொள்கிறது என்பதையும், மாற்றங்களையும் அறிந்து கொள்வோம்.
சிவப்பு வண்ணம்
சிவப்பு நிற வண்ணத்தின் அதிதேவதை – முருகன். சூரபத்மனை வதம் செய்த முருகப் பெருமான் ரகசியம் சிவப்பு வண்ணம்.
நேர்மறை ஆற்றல் – நீங்கள் சிவப்பு நிறத்தை காண்பதால் ஆற்றல் அதிகமாகி நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மேலும், உற்சாகத்துடன் எப்பொழுதும் இருப்பீர்கள்.
எதிர்மறை ஆற்றல் – அதிகப்படியான சிவப்பு நிறத்தை காண்பதால், வேகம் இன்னும் அதிகமாகி டென்ஷன், கோபம் அதிகமாவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.
இந்த வண்ணம் அதிகம் புழங்கும் இடம் – காவல்துறை கட்டிடங்களாகத்தான் உள்ளது.
நீல வண்ணம்
நீல வண்ணத்தின் அதிதேவதை – பெருமாள். கோபியர்களோடு குழந்தை முதல் இளைஞனாகும் வரை மகிழ்ச்சியாக வாழ்ந்த கிருஷ்ணன், ரகசியம் நீல வண்ணம்.
நேர்மறை ஆற்றல் – மனம் அதிகப் படியான கவலையை ஏற்படுத்தினால் அந்த கவலையை போக்கும் வண்ணம் நீலம். மனச்சோர்வை அகற்றும். மனஅழுத்தம் போகக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சில நேரங்களில் உடலில் ஏற்படும் வலியைகூட குணப்படுத்தும் தன்மையை செய்யக் கூடியது.
எதிர்மறை ஆற்றல் – இந்த வண்ணம் அதிகமாக பயன்படுத்துவதால், மந்தத் தன்மையை அடைவீர்கள். சோம்பல் தாக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம்.
இந்த வண்ணம் அதிகம் புழங்கும் இடம் – கடற்கரை பகுதிகள், மலைமீது அமர்ந்து வானத்தை அதிகம் ரசித்து இருப்பது.
பச்சை வண்ணம்
பச்சை வண்ணத்தின் அதிதேவதை – பெருமாள். ஆனந்தமாக குளிர்ச்சியை தரக்கூடிய பெருமாள், மார்கழியில் பாசுரங்களால் பாடப்படுகிறான்.
நேர்மறை ஆற்றல் – மனச் சோர்வை போக்குகிறது. கண்களுக்கு குளிர்ச்சியை தருகிறது. உள்ளுறுப்புகள் வளர்ச்சி பெறும் ஆற்றலை பச்சை நிறத்திலிருந்து பெற்றுக் கொள்கிறது. நோயை குணப்படுத்தும், நிறமாக பச்சை உள்ளது. ரத்த அழுத்தம் குறையும். கண்கள் தொடர்பான குறைபாடுகள் சரி செய்யப்படுகிறது.
எதிர்மறை ஆற்றல் – அதிகப்படியாக பச்சை நிறத்தை பயன்படுத்தும்போது குளிர்ச்சி அதிகமாகி, சளி தொந்தரவுகள் வரக்கூடும். ரத்த ஓட்டம் மெதுவாக செயல்படும். குறைவான ரத்த அழுத்தம் உண்டாகவும் வாய்ப்பு இருக்கும்.
இந்த வண்ணம் அதிகம் புழங்கும் இடம் – மரங்கள் மற்றும் புல்வெளிகள் அதிகம் உள்ள பகுதிகள்.
தொகுப்பு: சிவகணேசன்
The post வண்ணங்களும் எண்ணங்களும் appeared first on Dinakaran.