சென்னை உயர்நீதிமன்றம் நாளை இயங்கும்: பதிவாளர் அறிவிப்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் நாளை இயங்கும் என பதிவாளர் அறிவித்துள்ளார். ஏற்கனவே பட்டியலிடப்பட்ட வழக்குகளின் விசாரணை நாளை வழக்கம்போல் நடைபெறும். மழையால் வழக்கறிஞர், மனுதாரர்கள் ஆஜராகவில்லை என்றாலும் அவர்களுக்கு பாதகமாக உத்தரவு பிறப்பிக்கப்பட மாட்டாது. பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டிலும் நீதிமன்றங்கள் செயல்படும்.

The post சென்னை உயர்நீதிமன்றம் நாளை இயங்கும்: பதிவாளர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: