×

வேடசந்தூர் அருகே சாலையில் கவிழ்ந்த லாரி: போக்குவரத்து பாதிப்பு

 

வேடசந்தூர், டிச. 2: வேடசந்தூர் அருகே கருப்பட்டி ஏற்றிச்சென்ற லாரி, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நான்கு வழிச்சாலையில் கவிழ்ந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருச்செங்கோட்டில் இருந்து கருப்பட்டி லோடு ஏற்றிக்கொண்டு விருதுநகருக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. தங்கவேல் (64) அதன் டிரைவராகவும், சபரி (31) கிளீனராகவும் இருந்தனர். கரூர் – திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் பயணித்த லாரி, நேற்று காலை வேடசந்தூர் காக்கா தோப்பூர் பிரிவு அருகே, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்தது.

இந்த விபத்தில் டிரைவரும், கிளீனரும் சிறு காயங்களுடன் தப்பினர். தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். நடுரோட்டில் லாரி கவிழ்ந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து லாரியை விரைவாக அங்கிருந்து அகற்றிய போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்

The post வேடசந்தூர் அருகே சாலையில் கவிழ்ந்த லாரி: போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Vedasandur ,Dinakaran ,
× RELATED ‘நான் இன்னும் சாகலப்பா’ ஆம்புலன்ஸில்...