×

கோயிலுக்கு செல்லும் பாதையை சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்

 

ஆர்.எஸ்.மங்கலம், டிச.1: ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்கமடை கிராமத்தில் கோயிலுக்கு செல்லும் சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்களும், பக்தர்களும் வலியுறுத்தியுள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் சனவேலி அருகே செங்கமடை கிராமத்திலுள்ள கோட்டையா கோவில் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் உள்ளது. இங்கு வருடம் முழுவதும் வெள்ளி, செவ்வாய் மற்றும் திருவிழா காலங்களில் செங்கமடை மற்றுமின்றி, சனவேலி, ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, தேவகோட்டை, தொண்டி, தேவிபட்டினம், பரமக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வழிபடுவதற்காக வந்து செல்கின்றனர்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆலயத்திற்கு செல்லும் சாலை திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களும், இப்பகுதியில் உள்ள பக்தர்களும் டூவீலர் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். ஆகையால் இந்த சாலையை பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட நிர்வாகம் சீரமைத்து பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்களும் கோயிலுக்கு வழிபட வரும் பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கோயிலுக்கு செல்லும் பாதையை சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : RS Mangalam ,Chengamadai ,Dinakaran ,
× RELATED மின் கம்பத்தை அகற்ற கோரிக்கை