நாகை எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம்: பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது

நாகப்பட்டினம்,நவ.30: பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் போக்கை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் நாகப்பட்டினம் அவுரித்திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தொமுச மாவட்ட கவுன்சில் தலைவர் தம்பிதுரை தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் அங்காடி சேகர், சிஐடியூ மாவட்ட தலைவர் சிவனருட்செல்வன், ஏஐடியூசி மாநில குழு கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். சிஐடியூ மாவட்ட செயலாளர் தங்கமணி, ஏஐடியூசி மாவட்ட செயலாளர் மகேந்திரன் ஆகியோர் பேசினர். விஷம்போல் உயர்ந்து வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

ஒன்றிய அரசுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் போக்கை கைவிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை விற்பனை செய்யகூடாது. தொழிலாளர் சட்டதிருத்த தொகுப்பை ஒன்றிய ஒன்றிய அரசு கைவிட வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

The post நாகை எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம்: பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது appeared first on Dinakaran.

Related Stories: