சென்னை: தங்கம் விலை 2 நாட்களில் சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது. தங்கம் விலை கடந்த 24ம் தேதி சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.45,880க்கும் விற்கப்பட்டது. ஆனால் மறுநாளே கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,755க்கும், சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.46,040க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், தங்கம் விலையில் மாற்றம் இல்லை. நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியதும் மேலும் மாற்றம் காணப்பட்டது. அதாவது, கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,780க்கும் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு சவரன் ரூ.46,240க்கும் விற்கப்பட்டது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது. தங்கம் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது நகை வாங்குவோரை கவலையடைய செய்துள்ளது.
The post தங்கம் விலை 2 நாளில் சவரன் ரூ.360 உயர்ந்தது appeared first on Dinakaran.