விருதுநகர், நவ.28: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், ரேசன்கார்டு, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டது.
மனுக்களை துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் பால் உற்பத்தியை அதிகரிக்க கிசான் கடன் திட்டத்தின் மூலம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க 5 கறவை உறுப்பினர்களுக்கு ரூ.1.26 லட்சம் மதிப்பிலான வட்டியில்லா கறவை மாடு பராமரிப்பு கடன்களை வழங்கினார். கூட்டத்தில் டிஆர்ஓ ரவிக்குமார், தனித்துணை ஆட்சியர் அனிதா உள்பட பலர் பங்கேற்றனர்.
The post மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல் appeared first on Dinakaran.
