அரியலூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலைப்போட்டிகள் துவக்கம்

 

அரியலூர், நவ.25: அரியலூரில், பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நேற்று தொடங்கியது. அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவ, மாணவிகள் 800 பேர் பங்கேற்றனர். அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி, நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, செயின்ட் மேரீஸ் பள்ளி ஆகிய பள்ளிகளில் போட்டிகள் தொடங்கியது. போட்டியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி தொடங்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா, உதவி திட்ட அலுவலர் பன்னீர்செல்வம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம், 9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கவும், நமது பாரம்பரிய கலைகளை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் வாய்ப்பாட்டு இசை, கருவி இசை, நடனம், காண்கலை, நாடகம் என்பன உள்ளிட்ட தலைப்புகளில் நடைபெறும் இப்போட்டிகளில் 50 பள்ளிகளில் இருந்து 800 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிகாட்டி வருகின்றனர். இன்றும் (நவ.25) கலைப்போட்டிகள் நடைபெறுகிறது.
போட்டிகளில் முதல் 3 இடங்கள் பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். முதலிடம் பெறுபவர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post அரியலூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலைப்போட்டிகள் துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: